Sunday, 24 January 2010

என்னைப் பார்த்தா கேட்கிறாய் ?

என்னைப் பார்த்தா கேட்கிறாய் ?


இதயமில்லாதவனே என்று
என்னைப் பார்த்தா
கேட்கிறாய் ?


பனி மலராய்
என் இதயம் எடுத்து
உன் பாதத்தில் சமர்ப்பித்தேன் !

நீயோ...
கசாப்புக் காரனைப்போல்
வெட்டி நொருக்கி
வீதிக்கே பந்தி இட்டாய்.

இப்பொழுதும்
நீயே கேட்கிறாய்.
எனைப் பார்த்து
இதயமில்லாதவனே என்று.!


யாருக்குப் புரிகிறது
காத்திருப்பின் அவஸ்தைகள்

புரியும் வரை
நாம்
பொறுத்திருப்போம் நிலவே...!

No comments:

Post a Comment