என்னைப் பார்த்தா
கேட்கிறாய் ?
பனி மலராய்
என் இதயம் எடுத்து
உன் பாதத்தில் சமர்ப்பித்தேன் !
நீயோ...
கசாப்புக் காரனைப்போல்
வெட்டி நொருக்கி
வீதிக்கே பந்தி இட்டாய்.
இப்பொழுதும்
நீயே கேட்கிறாய்.
எனைப் பார்த்து
இதயமில்லாதவனே என்று.!
யாருக்குப் புரிகிறது
காத்திருப்பின் அவஸ்தைகள்।
புரியும் வரை
நாம்
பொறுத்திருப்போம் நிலவே...!
No comments:
Post a Comment