Thursday, 21 January 2010

எந்த மனிதன் சம்மதிப்பான் ?

சம்மதமா ?

நிஜங்கள்
நேற்றல்ல..இன்றல்ல..
நாளையும் கூட
கசக்கும்.

மனித உறவுகள்
எப்போதும்
இப்படித்தான்.

வறண்ட குளம் விட்டோடும்
கொக்குகள்.

இதயம் திறந்து வைத்தால்
வெளி எங்கும்
நிறையும்..
மனித என்ன அழுக்குகளால்.

இதைக் கசக்கி
எரிந்து விட
எந்தக் கடவுளாலும் முடியாது.

முற்றாய்
முழு மனதாய் முடிவு செய்தால்
முழுவதையும் எரித்திடலாம்
மூடிப் புதைத்திடலாம்.

எந்த மனிதன்
முதலில்
இறக்கச் சம்மதிப்பான்.?



No comments:

Post a Comment