நான் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்தவன்.சென்ற ஆண்டு எனது ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை உங்களுக்கு காட்சிப் படுத்தியுள்ளேன்.புடிச்சு இருந்தா பாராட்டுங்க.அன்புடன் உங்கள்....
இது சாதாரணமாக வீட்டில் அதன் கட்டுத்துரையில் கட்டியிருக்கும் காட்சி.வருஷம் முழுதும் இப்படி கட்டிய இடத்திலேயே உணவு,நீர் எல்லாமே அதற்கு கிடைக்கும்.தை பொறந்த பின் அதற்கு வேலை வந்துடும்.எப்படின்னு நினைக்கிரிங்களா.? கீழே வாங்க.

ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்களுக்கு கொஞ்சமா விளக்கம் தாரேனுங்கோ.
இந்த படம் காளையை கயிறை அவுத்து விடுற காட்சிங்கோ.

வாடி வாசலை விட்டு வெளியே வந்த காளை ஒன்று யாராவது என் அருகிலே வாங்களேன் அப்படின்னு கூப்புடுற மாதிரி தெரியுதுங்களா.
இந்த மாதிரி ஒரு காட்சியை பார்ப்பதற்கு தானுங்க அந்த காளைக்கு சொந்தக்காரர் பல ஆயிரங்களை செலவழித்து,பல சிரமங்களுக்கு இடையிலே ஜல்லிக்கட்டுக்கு இந்த காளையை கொண்டு வந்து சேர்க்கிராருங்க.

இவரு ரொம்ப அமைதியானவருங்க.ஆனா பக்கத்தில யாரும் வந்தா இவருக்கு பிடிக்கிறது இல்லிங்க. ரொம்ப நல்லவருங்கோ இவரு.



சரியான சண்டியர் இவருங்க, பார்த்தாலே தெரியுதுங்களா.
குறும்பு அதிகமுங்க.

இவரு எப்பவுமே நாலு கால் பாய்ச்சல் தானுங்க.எதிரே யாரும் நிக்கமுடியாதுங்க.அவ்வளவு வேகம்.

அருமையா காளையை அடக்கிற காட்சி பாருங்களேன்.சரியான சண்டியர் இவருங்க
பிடிச்சு இருந்தா சொல்லுங்க.இன்னும் கொஞ்சம் பதிவிடுறேன்.
ரொம்ப நன்றிங்க.வந்து போனதுக்கு தாங்க.
No comments:
Post a Comment