இன்னும் கொஞ்சம் வேண்டுமா?.
என் இனிய இந்திய பெருமக்களே.அரசியல்வாதிகள் கொடுக்கிற அல்வா போதாது என்று இவர்களும் (முதலாளிகள் தாங்க) இறங்கி விட்டனரே.சமீப காலமா இவங்க கொடுக்கிற அல்வா இருக்குங்களே.தாங்க முடியலீங்க.
வடிவேலு பாணியில் சொன்னால் 'என்ன நடக்குது இங்க' னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.
சமீபத்தில் பத்திரிக்கைச் செய்தியில் கீழே வந்த செய்தியை படித்த எனக்கு தலை சுற்றுகிறது.நீங்களும் அதை படியுங்கள்.
பெங்களூரை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. மதுபான நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு சொந்தமாக விமான நிறுவனம், ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஆகியவை உள்ளன. இத்தொழில்கள் மூலம், கோடிகளை வருமானமாக குவித்துள்ளார். சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் மனுதாக்கல் செய்யும்போது, தனக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விவரங்களையும் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார். அதில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில், தனக்கு சொந்தமாக சிறிதளவு நிலம் கூட இல்லை என அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல், "என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ, அல்லது என் இரு மகள்கள் லீனா, தான்யா பெயரிலோ நிலமோ, வீடோ எதுவும் இல்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், இவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தனக்கு 615 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதில், கையிருப்பு ரொக்கமாக 9,500 ரூபாயும், எல்.ஐ.சி., பாலிசி மூலமாக 13.50 லட்ச ரூபாயும், பங்கு பத்திரங்கள் மூலமாக 591.65 லட்ச ரூபாயும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 4.48 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலே ஒரு அடி பூமி கூட இல்லைங்கிறது நம்பும்படியாக இருக்கு.அப்படியே இல்லைன்னு வச்சுகிட்டாலும் அவருக்கு எதுக்குங்க எம்.பி பதவி?.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சுயேச்சையான அவருக்கு,கட்சி மாறி வாக்களித்து வெற்றி பெற வைத்து உள்ளதை நினைச்சாலே,அவர்களோட(மக்களுக்கு தொண்டு செய்யணும் என்ற எண்ணம்)நல்லாவே நமக்கு புரியுது.
அப்படியே எந்த எந்த நாட்டிலே எவ்வளவு பூமி இருக்குங்கிற கணக்கையும் கொடுத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.
இனிமேல் தேர்தல் கமிசன் இந்த கேள்வியையும் கேட்டா நல்லாயிருக்கும்.ஏன்னா இப்ப எல்லாம் நம்ம ஆளுங்களுக்கு நம்ம நாட்டைவிட வெளி நாட்டிலே தான் சொத்து அதிகமா இருக்கிறதா கேள்வி.
இந்த காமெடிக்கு எல்லாம் முடிவே இல்லையா?.
Thursday, 24 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment