பராசக்திக்கு கடிதங்கள். நியாயம் தானா தலைவரே ?
முதல்கட்ட அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு சேவையைத் துவக்கி வைத்து, அரசு ஏற்பாடு செய்த விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
ஜூலை 15ம் தேதி அரசு கேபிள் "டிவி' நிறுவனம் சேவைகளைத் துவங்கும் என்று அறிவித்திருந்தேன். பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், சொன்னபடி சொன்ன நாளில் அப்பணிகள் இன்று துவங்கப்படுகின்றன. மத்திய அரசின் அனுமதி, ஏப்ரல் 2ம் தேதி தான் கிடைத்தது. நான்கு மாத குறுகிய காலத்திற்குள் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, உலகப் புகழ்மிக்க நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, தரம் வாய்ந்த இயந்திரங்களைக் கொள்முதல் செய்து, பன்னாட்டு நிபுணர்களைக் கொண்டு நிறுவி, இன்று சேவை துவங்கப்படுகிறது. இது ஒரு சாதனை.
வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்திற்காக அல்ல; பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்கும் நோக்கத்தில் தான் இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, பொதுமக்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்தனர். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சில எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்து கணிசமான தொகையை வசூலித்து லாபம் சம்பாதித்து வந்தன.
இதில் ஏராளமான புகார்களும், முரண்பாடுகளும் தொடர்ந்து வந்ததால் அரசே மக்களுக்கு உதவ, இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.இது ஒரு புதிய திட்டம். எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. உலக அளவில் செயல்படுத்தப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி. இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. மாநிலம் எங்கும் ஒரே கட்டணமாக 100 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 16- 2008- இல் தினமலர் செய்தி.
இந்த நிறுவனத்தை தலைமையேற்று நடத்திய தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி உமாசங்கர் அவர்களின் தற்போதைய நிலை என்னெவென்று தெரியுமா?.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதா வது:
தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவிதப் புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக் கப்பட்டேன். சன் டி.வி. குழு மத்துக்குச் சொந்தமான சுமங் கலி கேபிள் டி.வி. நிறுவனம், அரசு கேபிள் டி.வி. நிறுவ னத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.
இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத் தின் சட்ட விரோத நடவடிக் கைகளையும் அரசின் கவனத் துக்குக் கொண்டு வந்தேன். சுமங்கலி கேபிள் நிறுவ னத்தை தேசியமயமாக்குவ துடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட் டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசிய மயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங் கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக் கைக்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, வரு மானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப் போது எனது சொத்து விவரங் களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசா ரணை நடத்துவதற்கு சட்டப் படி அனுமதியும் பெறப்பட வில்லை. நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்ட தால் என் மீது களங்கம் கற்பிக் கும் வகையில் இந்த விசா ரணை மேற்கொள்ளப்படு கிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.
வருமானத்துக்கு அதிகமா கச் சொத்து சேர்த்ததாக போது மான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நட வ டிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தி னர், நண்பர்கள் மீதும் காவல் துறையை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு வில் கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதி வி.தனபாலன் முன்னி லையில் விசாரணைக்கு வந் தது. இதுதொடர்பாக, தமிழக அரசு ஜூன் 28-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் தடுப்பு காவல்துறை யினரின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதி பதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் இது தான் தலைவரே.
ஒரு அரசு அலுவலர்,அரசாங்கம் தனக்கு இட்ட வேலையை செய்வது அவரின் தார்மிகக் கடமை அல்லவா?.அதுவும் ஒரு அரசின் சாதனைத் திட்டம் என்று முதல்வரே அறிவிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற திட்டத்தை செயல்படுத்தியது குற்றமா தலைவரே?.
அந்த நிறுவனத்தை சிறப்பாக செயல்பட,தடைக் கற்களை அகற்ற அவர் செய்த முயற்சிகள் தவறா தலைவரே?.
ஒரு நேர்மையான அதிகாரி நீதிமன்றம் வரை வந்து தான் தன் கௌரவத்தை காப்பாற்ற வேண்டுமா?.அத்தகைய ஆட்சியைத் தான் தாங்கள் நடத்திக் கொண்டுள்ளீர்களா?.
இந்த நாட்டின் உயர்ந்த பரிசுப் பணியில் உள்ளவர்களுக்கே இந்த கதி என்றால் சாமானிய அரசு ஊழியர்கள் கதியை நினைத்தால் ???.
உங்களுக்கு மட்டும் தான் பழைய செய்திகள் நியாபகத்திற்கு வரும் என்றில்லை.எங்கள் மனதிலும் பராசக்தியின் கோர்ட் வசனங்கள் நியாபகத்திற்கு வருகிறதே தலைவரே?.
உங்கள் குடும்ப சண்டைக்கு இன்னும் எத்தனை எத்தனை தலைகள் உருளப் போகிறதோ என நினைக்கும்போது உண்மையிலேயே பயமாக இருக்கிறது தலைவரே?.
உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.குடும்பம்னு ஒன்னு இருந்தால் சண்டைகள் வர்றது சகசம் தான்.அதுக்காக பொது மக்களையோ அரசு ஊழியர்களையோ பழி வாங்க வேண்டாம்னு குடும்பத்துலே சொல்லி வையுங்க தலைவரே?.
நீங்க நாளைக்கு சேர்ந்துக்கலாம்.போற உயிரும்,அப்பாவிகள் அனுபவிக்கிற கஷ்டமும் வார்த்தையிலே சொல்ல முடியாது தலைவரே?.
தயவு செய்து உங்களிடம் நாங்கள் கேட்டு கொள்வதெல்லாம்,உங்கள் குடும்ப சண்டைக்கு அரசின் நிதியை விரயமாக்கி,அரசு எந்திரத்தின் உழைப்பை வீணாக்குவதை நிறுத்துங்கள் தலைவா.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும். என்று
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தான் சொல்லணும் தலைவரே.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உமாசங்கர் நியாயமான அதிகாரி என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர் இந்தச் சோதனையிலிருந்து மீண்டு வருவார்.
Well Said. Things are not far way.. If this is the path, then the end is started walking towards him.
Chandramohan
Seemachu அவர்களே.கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி
Post a Comment